பதிவு செய்த நாள்
10
நவ
2016
12:11
ஆர்.கே.பேட்டை: ஐப்பசி பவுர்ணமி திதியான, வரும், 14ம் தேதி, திங்கட்கிழமை, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் வியாசேஸ்வரர் மலைக்கோவிலில், வரும் 14ம் தேதி, திங்கட்கிழமை, ஐப்பசி பவுர்ணமி நாளை ஒட்டி, காலை, 7:15 மணிக்கு, மூலவருக்கு, 108 பால் குடம் அபிஷேகமும், அதை தொடர்ந்து, மாலை, 4:50க்கு அன்னாபிஷேகமும் நடைபெற உள்ளது. இரவு, 7:00 மணிக்கு, மூலவருக்கு அபிஷேகம் செய்த அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதே போல், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவில் மற்றும் நாகபூண்டி நாகேஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.