பதிவு செய்த நாள்
10
நவ
2016
12:11
நகரி: கரகண்டேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நாளை காலை, மகா கும்பாபிஷேகம், திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. சித்துார் மாவட்டம், நகரி டவுனில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கரகண்டேஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், ஏழு யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து முதல்கால யாக சாலை பூஜைகள் நடந்தன. இன்று, இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. நாளை (11ம் தேதி) காலை, 9:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை மற்றும் கலச ஊர்வலமும், காலை, 10:30 மணிக்கு புதிய விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் கரகண்டேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் வீதியுலா நடைபெறுகிறது.