முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2016 12:11
தர்மபுரி: தர்மபுரி அடுத்த ஏலகிரியான்கொட்டாய் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏலகிரியான்கொட்டாய் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 11ல் நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு, நேற்று அம்மன் அழைப்பு மற்றும் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கோவிலில் இருந்து வாகனத்தில், முத்துமாரியமன் சிலை ஊர்வலமாக அதியமான்கோட்டைக்கு அழைத்து வரப்பட்டது. பின், இங்கிருந்து அம்மன் அழைப்பு மற்றும் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏலகிரியான் கொட்டாயில் உள்ள கோவிலில் இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. இன்று கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகள் துவங்குகிறது. நாளை (நவ. 11) காலை, 7:30 மணி முதல், 9:00 மணிக்குள் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.