Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாயாண்டிசுவாமி கோயிலில் குருபூஜை ... ஈரோடு கோவிலில் விஜயதசமி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயதசமி விழா கோலாகலம் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2011
11:10

தக்கலை : தக்கலை, வெட்டுவெந்நி, கொல்லங்கோடு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நடந்தது. நாடெங்கும் கொண்டாடும் விஜயதசமி விழாவை முன்னிட்டு தக்கலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் கோயில், குமாரகோவில் முருகன் கோயில், தக்கலை பெருமாள் கோயில், பார்த்தசாரதி கோயில் உட்பட பல கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்து சொல்லிக் கொடுக்கும் வித்யாரம்பம் நடந்தது. ஒவ்வொரு கோயில்களிலும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கு கொண்டனர். பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் கோயிலில் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் கிரிஜா குமாரி அம்மா, பேராசிரியை ஜெயகுமாரி, ஓய்வுபெற்ற பேராசிரியர் விஜயமோகனன் குழந்தைகளுக்கு எழுத்து சொல்லி கொடுத்தனர். தக்கலை பெருமாள் கோயிலில் ஆசிரியர்கள் லீலாபாய், மோகனா, கீதா, ஈஸ்வரபிரசாத் ஆகியோரும், தக்கலை பார்த்தசாரதி கோயிலில் ஆசிரியர் ஈஸ்வரபிரசாத்தும் குழந்தைகளுக்கு எழுத்து சொல்லி கொடுத்தனர். இதுபோல் குமாரகோவிலில் கோயில் பூஜாரிகள் குழந்தைகளுக்கு எழுத்து சொல்லி கொடுத்தனர். இந்நிகழ்ச்சியின் போது குழந்தைகளின் பெற்றோர்கள், கோயில் கமிட்டியினர், பக்தர்கள் கலந்து கொண்டனர். வெட்டுவெந்நி கோயில் நவராத்திரி விழா நாடுமுழுவதும் கோயில்கள் மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது. மார்த்தாண்டம், குழித்துறை, வெட்டுவெந்நி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் சார்பில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் விஜயதசமி அன்று இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எழுத்துக்கு இருத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் எழுத்துக்கும் இருத்தும் "அட்சர அப்யாஸம் நிகழ்ச்சி நடந்தது. வெட்டுவெந்நி கண்டன் சாஸ்தா கோயிலில் வித்யா ராஜகோபால பூஜை நடந்தது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தலைமையில் சரஸ்வதி சன்னிதியில் எழுத்துக்கு இருத்தும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் செயலாளர் புரு÷ஷாத்தமன் நாயர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதைப்போல் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் கோயில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில், கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் எழுத்துக்கு இருத்தும் அட்சர அப்யாஸம் நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar