பதிவு செய்த நாள்
17
நவ
2016
11:11
குறிச்சி: குறிச்சியில், அரவான் திருவிழா முன்னிட்டு, அரவான் - பொங்கியம்மன் திருமண விழா நேற்று நடந்தது. குறிச்சி முதுப்பார் கோவிலில் விழா கடந்த, 8ல் துவங்கியது. நேற்று முன்தினம் பெருமாள் கோவிலில், அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதல் நடந்தது. நேற்று காலை, அரவான் அலங்கரிக்கப்பட்டு, உருமால் கட்டும் சீர் முடிந்து, பெருமாள் கோவிலிலிருந்து, அரவான் எழுந்தருளுதல் நடந்தது. தொடர்ந்து, அரவான் குறிச்சி குளக்கரை விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி, சிறப்பு வழிபாட்டுடன் புறப்பட்டது. இரவு, அரவான் கோவிலில், அரவான் - பொங்கியம்மன் திருமண விழா நடந்தது. இதையொட்டி, மாவிளக்கு வழிபாடு நடந்தது. திரளானோர் பங்கேற்றனர். இன்று மதியம், நாதஸ்வர கச்சேரியுடன், முக்கிய விழா துவங்குகிறது. இரவு, குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு முடிந்து, அரவான் புறப்படுதல் நடக்கிறது. நிறைவு நாளான, நாளை காலை, 9:00 மணிக்கு அரவான் திருவீதி உலா துவங்குகிறது.