திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் மூலவர் காசி விஸ்வநாதர் சன்னதியில் ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் அலங்காரமானது.மகாதேவ அஷ்டமி: திருப்பரங்குன்றம் சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் மூலவர்கள் சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்,பூஜைகள் முடிந்து அன்னதானம் நடந்தது. உலக நன்மை, அனைவருக்கும் அனைத்து செல்வங்களும் கிடைக்க வேண்டி மகாதேவ அஷ்டமி கமிட்டி நிர்வாகிகள் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சத்திய கிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு வைத்து வழிபட்டனர்.