கடலூர்: புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து திருப்பதி சீனுவாசன் அலங்காரத்தில் பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூமிதேவி சகிதமாக ராஜகோபாலன் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.