பதிவு செய்த நாள்
13
டிச
2016
12:12
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வினாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி, நடராஜர், நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலையுடன், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்தார். புதுச்சேரி கந்தன் நாராயணசாமி, தொரவி அ.தி.மு.க., பிரமுகர் சுப்ரமணி, ஸ்ரீதர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி நாகேஸ்வரி சங்கர், ஏனாதிநாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர், சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.