திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்கபாபிஷேகம் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது. மாலையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 1008 சங்கபாபிஷேகம் நடந்தது. திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில், தொண்டி சிவன் கோயில், ஐயப்பன் கோயில்களில் திருகார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை, தீப வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.