மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி பிரதட்சணம் சுவாமி புறப்பாடு டிச.,21ல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமி சப்பரங்கள் கோயிலில் இருந்து அதிகாலை 5:00 மணிக்கு புறப்பாடாகி யானைக்கல், வடக்கு, கிழக்கு, தெற்கு வெளி வீதிகள், திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் சாலை, விளக்குத்துாண் வழியாக கீழமாசி வீதி தேரடி வந்து சேரும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.