திருவண்ணாமலை தீப திருவிழா: பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2016 11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், அய்யங்குளத்தில், மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கும். நேற்று முன்தினம் இரவு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தெப்ப உற்சவத்தில் அருள்பாலித்தனர். நேற்று பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் எழுந்தருளி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், குளத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இன்று இரவு, 9:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யர் தெப்பத்தில் எழுந்தருள உள்ளார்.