கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம் 4வது சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக மூலவர் ராமநாதீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பின்னர், 108 சங்காபிஷேகமும், சிறப்பு யாகங்களும், உற்சவ மூர்த்தி ஊர்வலமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், சிவாச்சாரியார் பாலகிருஷ்ணன், கவுரிசங்கர், ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி, உபயதாரர் வைத்தியலிங்கம் ஆகியோர் செய்தனர்.