அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2016 11:12
மயிலாடுதுறை: அய்யாவாடி ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் மார்கழி மாத அம்மாவாசையை முன்னிட்டு கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலில் ராவணன் மகன் மே கநாதன், பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றனர். சிறப்பு வாய்ந்த கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகு ம்பலா யாகம் பிரசித்திப்பெற்றது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை பிரார்த்தனை செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். மார்கழி மாத அம்மாவாசையான நேற்று காலை கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருளச் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் வேத மந்திரங்கள் ஓத, தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார்.