Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை கரூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு கரூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் ஜெயந்தி விழா: தர்மபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
அனுமன் ஜெயந்தி விழா: தர்மபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

29 டிச
2016
12:12

தர்மபுரி: அனுமன் ஜெயந்தியையொட்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள, பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி எஸ்.வி., ரோடு ஆஞ்சநேய சுவாமி கோவிலில், அதிகாலை, 6.00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 8:00 மணிக்கு மேல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வே.முத்தம்படட்டி வீரஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசம் செய்தனர். இதேபோல், தர்மபுரி ஹரிஹரநாத சுவாமி கோவில்தெரு தாசஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில், சவுளூர் ஆஞ்சநேயர் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்ச நேயர் கோவில்களில், ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

* கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, மஹா சுதர்சன ஹோமம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை தங்கத் தேர் உற்சவம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதா ராம, வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சுவாமிகளின் ம்ருத்திகா ப்ருந்தாவனத்தில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நெடுமருதி கிராமம் வசந்தப்பள்ளி ஏரி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த விழாவில், சீதா ராம கல்யாணம், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பர்கூர் அடுத்த சின்னகாரகுப்பம் ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று விஸ்வரூப தரிசனம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar