Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் ஜெயந்தி விழா: தர்மபுரி ... திருவண்ணாமலை கிரிவலப்பாதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு
எழுத்தின் அளவு:
கரூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

பதிவு செய்த நாள்

29 டிச
2016
12:12

தான்தோன்றிமலை: கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும், நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு துளசி மாலை அணிவித்தும், வடைமாலை சாற்றியும் வழிபட்டனர். கரூர், ஈஸ்வரன் கோவில் அருகேயுள்ள, ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு காலை, 7:00 மணிக்கு பசுபதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு மஹா யாகம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேருக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர், திரவியப்பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த வடைமாலைகள் சாற்றப்பட்டது. ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. நேற்றிரவு, 7:00 மணியளவில் பசுபதி ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடந்தது. வெண்ணெய்மலை ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவில், வெள்ளியணை தென்பாகம் கிராமம், பச்சப்பட்டியில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவில், அபயப்பிரதான பெருமாள் கோவில், தான்தோன்றி மலையில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் உட்பட பல்வேறு சன்னதியில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் உள்ள, ஆஞ்சநேயருக்கு பல்வேறு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் மற்றும் வடைமாலை சாற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

* கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாப்பேட்டை கொடிக்கால் செல்லும் சாலையில், பிரசித்தி பெற்ற ஆஞ்நேயர் கோவில் உள்ளது. அனுமன்ஜெயந்தி விழா முன்னிட்டு, ஆஞ்சநேயர் சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்து, மலர்கள் மற்றும், 508 வடைமாலை சாற்றப்பட்டு பூஜை செய்யப்பட்டது. லாலாப்பேட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar