Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்! ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி.,கோயிலில் பகல்பத்து உற்சவம் : பிறந்த வீட்டில் எழுந்தருளிய ஆண்டாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2016
11:12

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் பச்சை பரத்தல் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. பிறந்த வீடான வேதபிரான் திருமாளிகைக்கு ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருளினார். நேற்று மாலை 4:35 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாரை ஆடிப்பூர பந்தலில் வேதபிரான் பட்டர் வரவேற்றார். அவருக்கு கோயில் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். பிறந்த வீடான வேதபிரான் திருமாளிகைக்கு எழுந்தருளிய ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு மணி பருப்பு , திரட்டுப்பால் நைவேத்யம் படைத்தனர்.

Default Image
Next News

கோஷ்டி அருளிப்பாடு: அங்கு கட்டளைப்பட்டி கிராம மக்கள் கொண்டு வந்த பச்சைக் காய்கறிகளை பார்வையிட்டு, கீழமாடவீதி, ராஜகோபுரம் வழியாக திருவோண மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். அப்போது ஆண்டாளுக்கு பிறந்த வீட்டு சீதனமாக காய்கறிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து திருப்பல்லாண்டு துவங்கியது.தொடர்ந்து பகல்பத்து மண்டபத்தில் திருவாரதனம், கோஷ்டி அருளிப்பாடு நடந்தது. நள்ளிரவில் மூலஸ்தானம் வந்தடைந்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் ராமராஜா,வேதபிரான் அனந்தராமகிருஷ்ணர், சுதர்சனன், அரையர் முகுந்தன், ஸ்தானிகம் ரமேஷ் பங்கேற்றனர்.

பச்சை பரத்தல்பார்க்க வந்த கிளி : வேதபிரான் திருமாளிகையில் சிறப்பு பூஜைகள் நடக்கும்போது, பந்தலுக்கு மேல் கிளி ஒன்று அங்கிருந்த மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. தீபராதனை முடிந்தவுடன் கிளி பறந்து சென்றது. இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar