Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: ... திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பக்தர்களிடம் போலி கைடுகள் வசூல்: மலைக்கோயில் செல்ல ரூ.2000 கட்டணம்
எழுத்தின் அளவு:
பழநி பக்தர்களிடம் போலி கைடுகள் வசூல்: மலைக்கோயில் செல்ல ரூ.2000 கட்டணம்

பதிவு செய்த நாள்

30 டிச
2016
11:12

பழநி: பழநி மலைக்கோயிலில் விரைந்த தரிசனம் மற்றும் கோயில்களை சுற்றிக் காட்டுவதற்கு எனக்கூறி, போலி ’கைடுகள்’ (இடைத்தரகர்கள்) சிலர் ரூ.2000 வரை பக்தர்களிடம் வசூலிக்கின்றனர். புகழ்பெற்ற ஆன்மிக தலமான பழநி மலைக்கோயிலுக்கு சபரிமலை ஐயப்ப பக்தர்கள், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அரையாண்டுதேர்வு விடுமுறை காரணமாக வெளியூர் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.

போலி கைடுகள்: இதனால் சாதாரண நாட்களில் 2 மணிநேரம், விடுமுறை நாட்களில் 4 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்கின்றனர். அவ்வாறு காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கிறோம்” எனக்கூறி சுற்றுலா பயணிகள், பக்தர்களை, பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் பகுதிகளிலேயே வழி மறைத்து, ’கைடுகள்’ என அறிமுகப்படுத்திக்கொள்ளும் கும்பல் வசூல்வேட்டை நடத்துகிறது.

சிறப்பு அறைகள், ஸ்பெஷல் தரிசனம், பூஜை செய்து தருவது மற்றும் கோயில் வரலாறு, அணைகளை சுற்றிப்பார்ப்பது எனக் கூறி. ரூ.1500 முதல் ரூ.2000 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். பழநி பாதவிநாயகர் கோயில், வின்ச், ரோப்கார் ஸ்டேஷன் அருகே ஆரம்பிக்கும், இவர்களின் ’கவனிப்பு’ மலைக்கோயில் வரை தொடர்கிறது. இவர்களிடம் சிக்கும் பக்தர்கள் பெரும்பாலும் அவஸ்தைப்படுகின்றனர். இவ்விஷயத்தில் போலீசார் போலி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பழநியில் ’போலி கைடுகளை’ கட்டுப்படுத்த முடியவில்லை. குடும்பத்துடன் வரும் பக்தர்கள், இவர்களிடம் பணத்தை இழக்கின்றனர்.

கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பழநிகோயிலுக்கு என கைடுகள் கிடையாது. ’போலி’களிடம் ஏமாற வேண்டாம் என ஒலிபெருக்கியில் எச்சரிக்கிறோம். அறிவிப்பு பலகையும் உள்ளது. இதனால் மொழி தெரியாத வெளியூர் பக்தர்கள் அவர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். புகார் அளித்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு பூர்த்தி சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar