பதிவு செய்த நாள்
30
டிச
2016
12:12
பள்ளிப்பட்டு: ஹனுமந் ஜெயந்தி, இரண்டாவது நாளாக நேற்றும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. செந்துாரகாப்பில் அருள்பாலித்த சுவாமியை திரளான பக்தர்கள் த
ரிசனம் செய்தனர். அமாவாசை திதியை கொண்டு, நேற்று முன்தினமும், நேற்று பகல் 12:18 வரை யிலான மூலம் நட்சத்திரத்தை கணக்கிட்டு நேற்றும், ஹனுமந் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. வங்கனுார், ஆர்.கே .பேட்டை , பந்திகுப்பம் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் ஹனுமந்ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளிப்பட்டு வீர ஆஞ்சநேயர் மலை க்கே ாவிலில் நேற்று சிறப்பு உற்ச வம் நடந்தது. நேற்று, காலை 7:30 மணிக்கு, அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது, தொடர்ந்து செந்துார காப்பு மற்றும் மலர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பள்ளிப்பட் டு, ஈச்சம்பா டி, புதுபட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் , மலைக்கோவிலில் அனுமனை தரிசனம் செய்தனர்.