பொன்னியம்மன் கோவிலில் வரும் 14ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2011 11:10
நடுவீரப்பட்டு : சித்தரசூர் பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது. பாலூர் அடுத்த சித்தரசூர் பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி 13ம் தேதி காலை 9 மணிக்கு விநாயகர் பூஜைநடக்கிறது. மாலை 6 மணிக்கு அங்குரார்பணம், ரக்ஷபந்தனம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 14ம் தேதி காலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், 6 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் திரவுபதியம்மன், நவசக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகமும், 10 மணிக்கு பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.