பதிவு செய்த நாள்
31
டிச
2016
12:12
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு டிச.,30 காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம் 39 லட்சத்து 39 ஆயிரத்து 541 ரூபாய் வசூலாகியது.
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது காணிக்கை உண்டியல்கள் டிச.,30 திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. பேரூர் உதவி ஆணையர் சரவணன் தலைமை வகித்தார். மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் தமிழ்வாணன், இந்துசமய அறநிலையத்துறை பொள்ளாச்சி ஆய்வர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில், 22 நிரந்தர உண்டியல்களில், 27லட்சத்து 80 ஆயிரத்து 774 ரூபாயும்; ஒன்பது காணிக்கை உண்டியல்களில், 11லட்சத்து 58 ஆயிரத்து 767 ரூபாயும் வசூலாகியது. தங்கம் 127 கிராமும்; வெள்ளி 106 கிராமும் இருந்தது. புலவர் லோகநாதன், திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நிரந்த உண்டியலில், 130, செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், தட்டு காணிக்கையில் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டும் இருந்தது.