Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா... கோஷங்கள் முழங்க ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
10:01

திருவல்லிக்கேணி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நேற்று, சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள், ’கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி கோஷத்துடன், பெருமாளை தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், மகா மண்டபத்தில் உற்சவருக்கு அலங்காரம் நடைபெற்றது. பின், 4:00 மணியளவில், உற்சவர் பார்த்தசாரதி மகா மண்டபத்தில் இருந்து எழுந்தருளி, உட்புறப்பாடு நடைபெற்றது. அதிகாலை, 4:30 மணியளவில், பரமபத வாசல் திறக்கப்பட்டது. அப்போது, ’கோவிந்தா... கோவிந்தா...’ என, பக்தர்கள் கோஷமிட்டனர். அதிகாலை, 5:00 மணியளவில், திருவாய்மொழி மண்டபத்தில், மூன்று சுற்றுக்கள் உற்சவர் பக்தி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில், வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளினார். வரிசையில் நிற்கும் பக்தர்கள் வசதிக்காக, கோவிலை சுற்றி நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. கோவிலுக்கு வெளியே, கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில், பரமபத வாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை, ஒளிக்காட்சியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு, சென்னை மாநகராட்சி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. நான்கு மாட வீதிகளிலும் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு, ’சிசிடிவி’ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது; பாதுகாப்பு பணியில், 500 போலீசார் ஈடுபட்டு இருந்தனர். சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்ட பிரசாதம், பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar