Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாசலேஸ்வரர் திருவூடல் ... காணும் பொங்கல் : சென்னையில் 15,000 போலீசார் குவிப்பு காணும் பொங்கல் : சென்னையில் 15,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வேடுபறி உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
10:01

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி விழாவின், ராபத்து எட்டாம் நாள் உற்சவத்தையொட்டி , திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது.

Default Image
Next News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இராபத்து உற்சவத்தின் 8வது நாள் நிகழ்ச்சியாக, கொள்ளையடித்து கொண்டிருந்த திருமங்கையாழ்வாருக்கு ஞானம் அளிக்கும் திருவேடு பறி உற்சவம் நடந்தது.விஷ்ணு பக்தனான திருமங்கையாழ்வார், வைணவ பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்பியபோது, அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் திருமங்கையாழ்வார் அன்னதானம் வழங்கி வந்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்க நிதி இல்லாதபோது, அதிக பொருள் உள்ளவர்களிடம் கொள்ளையடிக்க முடிவு செய்தாக கூறப்படுகிறது. இவரை திருத்த பெருமாள் திருமண கோலத்தில் ஆபரணங்களுடன் தம்பதியாக எழுந்தருளினார். பெருமாள் என்பதை தெரியாமல், தம்பதியரை இடைமறித்து திருமங்கையாழ்வார் நகைகளைப் பறித்தார். கடைசியாக பெருமாள் காலில் இருந்த மெட்டியைக் கழற்ற முயற்சித்தபோது, அவரின் திருமுடி பெருமாளின் திருவடியில் பட்டு ஞானம் பெற்று திருந்தியதாக வரலாறு கூறப்படுகிறது. இக்கதையை விளக்கி ஒவ்வொரு ஆண்டும் வேடுபறி உற்சவம் நடக்கிறது.  நடந்த வரும் ராபத்து உற்சவத்தின் எட்டாவது நாளில் வேடுபறி நிகழ்ச்சியில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar