பதிவு செய்த நாள்
18
அக்
2011
11:10
தென்காசி : பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் இன்று மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடக்கிறது. பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கடந்த 42 ஆண்டுகளாக தமிழ் மாதம் முதல் நாளன்று மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஐப்பசி மாத முதல் நாளை முன்னிட்டு மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடக்கிறது. அன்று காலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மதியம் ருத்ர ஏகாதி ஹோமம், பூர்ணதி நடக்கிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. எண்ணெய் காப்பு சாத்தப்பட்டு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், 108 லிட்டர் பால், பஞ்சாமிர்தம், தயிர், தேன், இளநீர், விபூதி, அன்னம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடக்கிறது. மாலையில் கோயிலில் நெய் விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார். சுவாமிக்கு ஏந்த பூஜை மற்றும் கபால பைரவருக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி, கோயில் ஊழியர்கள், ஆடிட்டர் கிருஷ்ணசாமி, மாதாந்திர முழுக்காப்பு அடியார்கள் செய்து வருகின்றனர்.