Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை லட்சுமி வராஹ பெருமாள் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பரிவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2017
12:02

பெரம்பலுார், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ராஜேந்திரசோழன், 1019-ல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன், காரணமாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டம் பெற்றார். அதன் நினைவாக, கி.பி.,1023-ல் அரியலுார் மாவட்டத்தில், கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கி, அதில் பிரகதீஸ்வரர் கோவிலை நிறுவினான். பெண்ணின் நலினத்தை போல இக்கோவிலின் விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த கோவிலில்,1932ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து, 85 ஆண்டுகளுக்கு பின், நேற்று பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 6ல் உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேசம் கங்கை நதியிலிருந்து, 108 குடங்களில் புனிதநீர் எடுத்து வந்தனர். தஞ்சை மாவட்டம், திருலோகி எனும் இடத்தில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் குறிப்புகள் கொண்ட இடத்தில் வைக்கப்பட்டு, பின் கடந்த 27ம் தேதி வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், ஆதினகர்த்தர் ஆகியோர் புடைசூழ யானை மீது புனிதநீர் வைக்கப்பட்டு ஊர்வலமாக கங்கைகொண்டசோழபுரத்திற்கு வந்தடைந்தது. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற, எட்டு 8 கால பூஜைகள் நடைபெற்றன.. இதில் 85 சிவாச்சாரியர்கள், 20 வேதவிற்பன்னர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வேதங்களையும், பண்ணிதிருமுறைகளையும் பாடி யாகபூஜைகள் செய்தனர். இந்நிலையில், நேற்று காலை கோபூஜை செய்யப்பட்டு, 8.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்தது. இதனையடுத்து, 9.30 மணியளவில் மூலவர், துர்க்கையம்மன், பிரகன்நாயகி ஆலயங்களின் கோபுரங்களில் வைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றினர். இதனையடுத்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் புதியதாக செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே இருக்கும் ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar