பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில், கைலாசநாதர் சிவன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான, கணபதி, முருகன், நவக்கிரஹங்கள் மற்றும் இதர சுவாமிகளுக்கு நேற்று காலை, 9:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக, கடந்த, 31 அன்று காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து, கணபதி, நவக்கிரஹ லட்சுமி ஹோமம்கள் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு, முதல் கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை செய்து, அனைத்து சுவாமிகளுக்கும் கோபுர கலசாபிஷேகம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. திம்மாச்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துருந்தனர்.