பழநி: பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உண்டியலில் எட்டு நாட்களில் ரூ.68 லட்சத்து 77ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் 8 நாட்களில் ரொக்கமாக ரூ.68லட்சத்து 77ஆயிரத்து 665ம், தங்கம்-355 கிராம், வெள்ளி-10,800 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்-635 கிடைத்துள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா, மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் துணை ஆணையர் செல்லதுரை மற்றும் கோயில், வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.