பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
திருப்பதி: தலைமுடி விற்பனை மூலம், 8.19 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை, தேவஸ்தான நிர்வாகம், ரகம் வாரியாக தரம் பிரித்து, மாதந்தோறும், முதல் வியாழக்கிழமைகளில் இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. பிப்.,2 நடந்த ஏலத்தில், 21 ஆயிரத்து, 600 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதில் 8.19 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக, தேவஸ்தானம் தெரிவித்தது.