பதிவு செய்த நாள்
04
பிப்
2017
01:02
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை சம்போடை வனத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலில், ரதசப்தமியொட்டி, பிப்.,3 காலை, 11:00 மணியளவில், மதுரகாளியம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. மதியம், 12:30 மணியளவில், ஏராளமான பெண்கள், குங்கும அர்ச்சனை செய்தனர். 1:00
மணியளவில், கோவிலை சுற்றி, சுவாமியை ஊர்வலம் கொண்டு வந்தனர். தீபாராதனை நடந்து, சிறப்பு அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார். இதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.