பதிவு செய்த நாள்
04
பிப்
2017
02:02
ப.வேலூர்: பாண்டமங்கலம், பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர் திருவிழா நடந்தது. ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் திருத்தேர் பெருவிழா, கடந்த, ஜன., 26ல் துவங்கியது. இதை முன்னிட்டு, நாள்தோறும் சுவாமி திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. பிப்.,3 அதிகாலை, 4:00 5.30 மணிக்குள், சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை, 4:40 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுத்தல் விழா நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, அலமேலு மங்கை, கோதைநாயகி ஆகியோருடன் சிறப்பு அலங்காரத்தில்
வெங்கட்ரமண சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை பல்லக்கு உற்சவம், (பிப்.,5) காலை திருமஞ்சனம், வரும், 6ல் ஸ்நபன திருமஞ்சனம், 7ல், திருமஞ்சனமும், கருட உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சாந்தி, திருவிழா குழுவினர்
செய்து வருகின்றனர்.