பவானி: சொர்ண கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பவானி, காமராஜ் நகர் அருகில் உள்ள கவுண்டர் நகரில், சொர்ணகணபதி கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த, 1ல், துவங்கியது. நான்கு கால யாக பூஜைக்குப் பின், பிப்.,6 காலை, 7:30 மணியளவில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.