Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் வருஷாபிஷேகம் வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் கோலாகலம்! வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிரிவீதியில் ஆக்கிரமிப்பு: பாவம் அலகு குத்திய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கிரிவீதியில் ஆக்கிரமிப்பு: பாவம் அலகு குத்திய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 பிப்
2017
12:02

பழநி, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயில் கிரிவீதியில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆக்கிரமிப்பு கடைகளை கண்டுகொள்ளாததால் அலகு குத்தி வரும் பக்தர்கள் நேராக நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தைப்பூசத்திருவிழா எதிரொலியாக பழநி மலைக்கோயில் கிரிவீதிகள், அடிவார ரோடுகளில் ஏராளமான வியாபாரிகள் குவிந்துள்ளனர். இவர்கள் ரோட்டின் நடுவே நுாற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். இதனால் ரோட்டில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. பாதயாத்திரை பக்தர்கள் காவடி, பால்குடங்கள், உடலில் அலகு குத்தி வரும்போது இடையூறு ஏற்படுகிறது. தைப்பூச விழா நேரத்தில் ஆக்கிரமிப்புகளை கோயில் நிர்வாகத்தினர் போலீஸ் உதவியுடன் பெயரளவிற்குத்தான் அகற்றுகின்றனர். அதன்பின் கோயில்அதிகாரிகள், போலீசார் ஏனோ கண்டுகொள்வது கிடையாது.

ஆக்கிரமிப்புக்கு ஆதரவு: பழநி அடிவாரம் பஸ் ஸ்டாண்ட் ரோடு, அய்யம்புள்ளிரோடு, பூங்காரோடு பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக கிரிவீதியில் வாகனங்கள் நுழைய தடை விதித்துள்ளனர். அதேசமயம் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதால், நீண்ட வேலால் அலகு குத்திச் செல்லும் பக்தர்கள் நேராக நடந்து வரமுடியாமல் சிரமப்படுகின்றனர். முக்கிய நாளான இன்று ஒருநாளாவது ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar