பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் ஆட்டம் பாட்டத்துடன் வந்தவண்ணம் உள்ளனர். தைப்பூசவிழா பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பிப்.,3ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள், அலகு குத்தியும் எடுத்தும், பஜனைகள் பாடி ஆட்டம் பாட்டத்துடன் வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்: பழநி ரோட்டில் சாரை சாரையாக பாதயாத்திரை பக்தர்கள் அணிவகுத்து வருகின்றனர்.நேற்று காரைக்குடி நகரத்தார் ஏராளமான காவடிகளுடன் வைரம் மற்றும் நவரத்தினகற்கள் பதித்த வைரவேலை பாரம்பரிய மரப்பெட்டியில் வைத்து மாட்டுவண்டியில் கொண்டு வந்தனர். மலைக்கோயிலில் பக்தர்கள் 5 மணிநேரம் வரை காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.