Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெண்ணெய்மலை முருகன் கோவிலில் ... சமயபுரம் அம்மனுக்கு சீர் வழங்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு முருகன் கோவில்களில் களைகட்டிய தைப்பூச விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2017
02:02

ஈரோடு மாவட்டத்தில், முருகன் கோவில்களில் தைப்பூச விழா நேற்று களை கட்டியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஈரோட்டில் பிரசித்தி பெற்ற, திண்டல் வேலாயுதசுவாமி கோவிலுக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், பால்குடம் சுமந்து ஊர்வலம் சென்றனர். படி வழியாகவும், மலைப்பாதை வழியாகவும் பலர் கோவிலுக்கு சென்றனர். முருகனுக்கு பாலாபிேஷகம் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார்.

*கோபி, பச்சமலை முருகன் கோவிலில், காலை 7:00 மணிக்கு மகன்யாச அபிேஷகம் நடந்தது. அதையடுத்து திருப்படித்திருவிழா, காவடி அபிேஷகம், 108 பால்குட அபிேஷகம் நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், மகன்யாச அபிேஷகம், பால்குட அபிேஷகம், யாகசாலை பூஜை, திரவ்ய ேஹாமம், மகா தீபாராதனை நடந்தது.

*அந்தியூர் தேர்வீதி சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு, பால்குடம், தீர்த்தகுடம், மற்றும் காவடி எடுத்துக் கொண்டு நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சுப்ரமணியர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவு, 7:௦௦ மணிக்கு திருவீதி உலா நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் நடந்தது.

*தைப்பூசத்தை முன்னிட்டு, சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதி சிக்கரசம்பாளையம், அரசூர், இண்டியம்பாளையம், அரியப்பம்பளையம் உட்பட, 10க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர். இவர்கள் நாளை மாலை சிவன்மலையும், நாளை மறுநாள் பழநி சென்றடைவர்.

*சிவன்மலை, பழநி, சென்னிமலை உள்ளிட்ட கோவில்களுக்கு தீர்த்தம் எடுத்துச் செல்ல, ஏராளமான பக்தர்கள் கொடுமுடிக்கு நேற்று வந்தனர். காவிரியில் தீர்த்தம் எடுத்து, சென்றனர். அதிகாலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். இதனால் கொடுமுடியில் கூட்டம் களை கட்டியது. அதேசமயம் கொடுமுடியில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு, கபிலர்மலைக்கு பாதயாத்திரை சென்றனர். தைப்பூச விழாவில், முருகப்பெருமானை வழிபட பக்தர்கள் குவிந்ததால், கோவில்கள் களை கட்டின. -நமது நிருபர்கள்-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar