பதிவு செய்த நாள்
11
பிப்
2017
01:02
கன்னிவாடி, தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், தை பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் பவுர்ணமி மகா தீபாராதனை நடந்தது. காளிங்க நர்த்தன கிருஷ்ணர், யோக ஆஞ்சநேயர், போகர், கோட்சார நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
* சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.