அவலுார்பேட்டை: முருகன் தாங்கல் கிராமத்தில் தைப்பூச விழா நடந்தது. முருகன் தாங்கல் கிராமத்தில் உள்ள பாலமுரு கன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு யாகமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனையும் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதேபோல் அவலுார்பேட்டையில் உள்ள வள்ளலார் மன்றத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது.