பதிவு செய்த நாள்
14
பிப்
2017
12:02
சென்னை: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ பெருவிழாவை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது. திருவேற்காடில், தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 23ம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா, ஜன., 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான, பிப்., 9ல் பல்லக்கு தீர்த்தவாரி, தைப்பூச ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. இதையடுத்து, மூன்று நாள் தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது. உற்சவர் கருமாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில், இரவு, 7:00 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்பத்தில், ஏழு சுற்றுகள் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்று நாள் தெப்பத்தையடுத்து, பிப்., 17ல் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதியுலாவும், அடுத்த நாள் விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. வரும், பிப்., 19ல் உற்சவர் அம்மனுக்கு, பிரம்மோற்சவ சாந்தி அபிஷேகத்துடன், விழா நிறைவு பெறுகிறது.