Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரராகவ பெருமாள் கோவில்களில் ஏகாதசி ... அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் ரத வீதிகளில் கட்டுப்பாடு தற்போதைய நடைமுறை தொடரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2017
12:02

ராமநாதபுரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தற்போதைய நடைமுறை தொடரும் என எஸ்.பி., மணி வண்ணன் கூறினார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக வாகனங்கள் செல்லவும், நிறுத்தி வைக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி., மணி வண்ணன் கூறியதாவது: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத வீதிகளில் உள்ள விடுதிகள், சத்திரங்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக கோயில், நகராட்சி நிர்வாகம் சார்பில் குறைந்த வாடகையில் பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது. கோயிலை சுற்றி கூடுதல் பாதுகாப்பிற்கு சிறப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களிடம் போலீசார் பணம் பறிப்பதாக புகார் அளித்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சுவாமி வீதியுலாவின்போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு ரத வீதிகளில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரத வீதிகளில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் அனுமதிக்கப் படுகிறது. முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் கோயிலை சுற்றி வர சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. நான்கு ரத வீதிகளில் வசிப்போர் வைத்துள்ள வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறை தொடரும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar