பதிவு செய்த நாள்
25
பிப்
2017
12:02
மேல்நல்லாத்துார்: மேல்நல்லாத்துார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பிப்25, மயான கொள்ளை உற்சவம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, மேல்நல்லாத்துாரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இங்கு, ஆண்டுதோறும் மயான கொள்ளை உற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டு மயான கொள்ளை உற்சவம், பிப்25, நடைபெற உள்ளது. பிப்24, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், தீபாராதனையும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மயான கொள்ளை உற்சவம், பிப்25, காலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. 9:00 மணிக்கு, அம்பாளுக்கு மகா அபிஷேகமும், அதை தொடர்ந்து, பக்தர்கள் வேல் குத்துதல், தீச்சட்டி எடுத்தல், அம்மன் வீதி உலாவும் நடைபெறும். பின், மாலை 6:00 மணிக்கு, மயான கொள்ளை உற்சவம் நடைபெறும்.