மதுரை கூடலழகர் கோயிலில் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2017 11:03
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9.30 மணிக்கு கொடியேற்ற பூஜைகள் தொடங்கி 10.30 மணிக்கு கொடியோற்றப்பட்டது.
பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டில் இடம்பெற்ற பழம் பெரும் கோயில் கூடலழகர் பெருமாள் கோயிலாகும். கோயிலின் மாசிமக தெப்பத்திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி, நாச்சியாருடன் எழுந்தருளினார். காலை 9.30 மணிக்கு கொடியேற்ற பூஜைகள் தொடங்கி, காலை 10.30 மணிக்கு கொடியோற்றப்பட்டது. இரவில் சுவாமி அன்னவாகனத்தில் ராஜாங்க சேவையில் மாட வீதியில் புறப்பாடானார். தினமும் காலை, இரவில் சுவாமி, நாச்சியாருடன் சிறப்பு வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.