சாயல்குடி, சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளம் சாஸ்தா கோயிலில் பொங்கல் விழா நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.