விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2017 04:03
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, காலை பகல் 11:00 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதையடுத்து, 11:15 மணியளவில் ஊர்வலமாக கொடி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிக்கு பூஜை செய்து, வன்னியடி சுற்று கொடி மரத்திற்கு பால் அபிஷேகத்துடன், கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, மற்ற நான்கு கொடி மரங்களிலும் கொடியேற்றப்பட்டன. அதில், 500க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.