பழநி: மாசித்திருவிழாவை முன்னிட்டு பழநி முத்துமாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. பழநி பழைய ரயில்வே காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பிப்.,21ல் மாசித்திருவிழா துவங்கியது. மார்ச் 9:00 வரை இவ்விழா நடக்கிறது. இவ்விழாவையொட்டி கம்பம்சாட்டுதல், பூவோடு வளர்த்தல், மாவிளக்கு திருவிழா, கஞ்சி வழங்குதல் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 11:30மணிக்கு சிவன், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 6:00 மணிக்கு அம்மன் திருவுலா வருதல் நடந்தது. நாளை சண்முகநதியில் தீர்த்தம் எடுத்துவந்து அபிஷேகம், மார்ச் 8ல் மஞ்சள் நீராடுதல், மார்ச் 9ல் பூச்சொரிதலுடன் விழா முடிகிறது.