பதிவு செய்த நாள்
06
மார்
2017
11:03
தென்னேரி: தென்னேரியில், 92வது ஆண்டு தாதசமுத்திர தெப்போற்சவம், நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில் ஆண்டுதோறும் தாதசமுத்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, 92வது ஆண்டு தொப்போற்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி தென்னேரி, அயிமிச்சேரி, நாவிட்டான்குளம், திருவங்காரணை, குண்ணவாக்கம், மலையடிவாரம், அகரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று இரவு தென்னேரி கிராமத்திற்கு வந்தடைவார். அங்கு, அவருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். அதன் பின், இரவு, 7:00 மணி அளவில், மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தென்னேரி ஏரி தெப்பலில், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். தெப்போற்சவ ஏற்பாடுகளை, ராஜரத்தின நாயுடு வகையறாவில், பாபு நாயுடு செய்து உள்ளார்.