திருவள்ளூர் முருகன் கோவில்களில் கிருத்திகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2017 12:03
திருவள்ளூர்: முருகன் கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், மாசி கிருத்திகையை முன்னிட்டு,சுப்ரமணியருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. மாலை, மகா தீபாராதனை நடந்தது. பூங்கா நகர் சிவ– விஷ்ணு கோவிலில் உள்ள பாலசுப்ரமணியருக்கு அபிஷேகம், மற்றும் அலங்காரம் நடந்தது. ஜெயா நகர், வல்லப கணபதி கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.