வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் தவக்கால வழிபாடு தொடங்கியது. சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் தவக்கால முதல்நாளான சாம்பல்புதன் வழிபாடுகள், ஆராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை ஆரோக்கிய அன்னை சர்ச்சின் பாதிரியார், திருத்தல அதிபர் மற்றும் துறவியர்கள் செய்திருந்தனர்.