திருக்கோஷ்டியூர் மாசி தெப்பம்: மார்ச் 12ல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2017 11:03
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவம் மார்ச் 12ல் நடக்கிறது. தெப்ப உற்சவம் : மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, கருடசேவையில் பெருமாள் அருள்பாலித்தார். இன்று காலை 9மணிக்கு சுவாமி புறப்பாடு, இரவு 8:00 மணிக்கு சேஷவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.மார்ச் 11ல் வெண்ணெய் தாழி சேவையில் திருவீதி புறப்பாடு, மார்ச் 12 காலையில் பகல் தெப்பம், இரவு 10 மணிக்கு இரவு தெப்பம் நடக்கும்.மார்ச் 13 காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியுடன், தெப்ப உற்சவம் நிறைவடையும்.