Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரம்சம்ஹாரம் : சூரனை வென்ற வீரனை ... திருச்செந்தூரில் சூரம்சம்ஹாரம் கோலாகலம்! திருச்செந்தூரில் சூரம்சம்ஹாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள்: பல மணி நேரம் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2011
10:10

நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை,தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர். நேற்றுமுன்தினம் (சனி) இரவு நிலவரப்படி, ஒன்றரை லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். தீபாவளி பண்டிகை, வார விடுமுறையையொட்டி, சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று தினங்களாக, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக, திருப்பதி, திருமலை பஸ் நிலையங்கள், ரயில் நிலைய பிளாட்பாரம் எங்கும், பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றனர். திருமலை கோவிலில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் அனைத்து வளாகங்களும் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியிலும் இலவச தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களின் வரிசை, ஒன்றரை கி.மீ., தூரத்திற்கு நீண்டுள்ளது. 300 ரூபாய் சிறப்பு தரிசன கியூவும், அரை கி.மீ., தூரத்திற்கும் அதிகமாக நீண்டுள்ளதால், இவர்களுக்கு சாமி தரிசனத்திற்கு, 4 மணி நேரம், இலவச தரிசனத்திற்கு தொடர்ந்து பல மணி நேரம், காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் கியூவும் நீண்டிருப்பதால், இங்கும் 4 மணி நேரம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்ஜித சேவா டிக்கெட் கவுன்டர்கள், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெறும் கவுன்டர் மற்றும் தங்கும் விடுதி பெறும் கவுன்டர்கள், லட்டு பிரசாதம் விற்பனை கவுன்டர்கள் அருகிலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கியூவில் நிற்பதைக் காண முடிந்தது.

வழக்கம்போல், தங்கும் விடுதிகள் கிடைக்காத பக்தர்கள், திருமலையின் சாலை ஓரங்களிலும், விடுதி வளாகங்களிலும் ஓய்வெடுத்து வருகின்றனர். கோவிலில், பக்தர்களின் துரித தரிசன வசதிக்காக, வெள்ளிக்கிழமை முதல் தொலை தூர தரிசனம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். சாமி தரிசனத்திற்காக, வைகுண்டம் வளாகங்களிலும், வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, குடிநீர், பால், உணவுப் பொட்டலங்களை தேவஸ்தான ஊழியர்கள் வழங்கி வருவதாக, துணை நிர்வாக அதிகாரி சினிவாச ராஜு தெரிவித்தார். லட்டு பற்றாக்குறை ஏற்படாதவாறு, முன்னெச்சரிக்கையாக குறைந்த அளவில் லட்டு டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்நிலை, நாளை பிற்பகல் வரை நீடிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த நவம்பர் மாதத்திற்கான, தோமாலை 153, அர்ச்சனை 184, வஸ்திர அலங்காரம் 14, அபிஷேகம் 42 போன்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை, பக்தர்கள் முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar