பதிவு செய்த நாள்
07
மார்
2017
12:03
கருமந்துறை: கருமந்துறையில், காளியம்மன் கோவில் திருவிழா, இன்று துவங்குகிறது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, சின்னக்கல்வராயன் மலை, கருமந்துறையில் உள்ள காளியம்மன் கோவிலில், இன்று காலை, 10:00 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு, 7:00 மணிக்கு சக்தி அழைத்தல் நடக்கிறது. நாளை காலை, 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மதியம், 2:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், அக்னி கரகம், தீ மிதித்தல் ஆகியவை நடக்கிறது. நாளை மறுநாள் இரவு, 8:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கில் காளியம்மன் திருவீதி உலா நடக்கிறது. வரும், 10ல், மஞ்சள் நீராட்டு டன், விழா நிறைவடைகிறது.