பதிவு செய்த நாள்
09
மார்
2017
10:03
பாலக்காடு: கேரளா, பாலக்காடு அருகே கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவிலில், ஏகாதசி சங்கீத உற்சவம் நேற்று நிறைவடைந்தது.
கர்நாடக இசை மேதை, செம்பை வைத்தியநாத பாகவதரால் துவக்கப்பட்ட சங்கீத உற்சவத்தை, அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். கடந்த 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், இசைக் கலைஞர்களின் கச்சேரி நடந்தது.நிறைவு நாளான நேற்று காலை 8:30 மணிக்கு, கோதண்டராம பாகவதர் தலைமையில், உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி, சதனம் ஹரிகுமார், வெள்ளிநேழி சுப்ரமணியன் தலைமை யில், பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது.மாலை 5:30க்கு, புவனா ராமசுப்புவின் சங்கீத ஆராதனை, குமரேஷ், ஜெயந்தி குழுவினரின் வயலின் கச்சேரி, 7:30க்கு, விஜய் ஜேசுதாஸ், 8:30க்கு, செம்பையின் சீடரும், கர்நாடக இசைக்கலைஞருமான ஜேசுதாசின் சங்கீத ஆராதனை பார்வையாளர்களை கவர்ந்தது. ஜெயன் கச்சேரியுடன் உற்சவ விழா நிறைவு பெற்றது. இன்று, பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது.