பதிவு செய்த நாள்
09
மார்
2017
12:03
திருப்போரூர்: பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று, திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில்,ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, 2ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து தொடர்ந்து நடைபெறும் விழாவில், முக்கிய நிகழச்சியான ரதோற்சவம், நேற்று, 7ம் நாள் உற்சவமாக நடைபெற்றது. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை யுடன் தேர் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் கந்தசுவாமி பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. 10:00 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பக்தர்களின், அரோஹரா கோஷம் விண்ணைப் பிளக்க, தேர் புறப்பட்டு, மாட வீதிகளில் வலம் வந்தது. பகல், 2:00 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. மாட வீதியை சுற்றிலும், ஆங்காங்கே பக்தர்களுக்கு விதவிதமான அன்னதானங்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து, சுவாமியை வழிபட்டனர்.